தொழிலில் நஷ்டம்: விரக்தியில் ஆட்டோ டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை..

கோவை செல்வபுரம், எல்.ஐ.சி. காலனியை சேர்ந்தவர் குலசேகரன். இவரது மகன் சதீஷ்குமார் ( வயது 39 ) இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து அதில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார் . குடிப்பழக்கம் உடையவர் .இவரது காய்கறி தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சதீஷ்குமார் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் மனைவியின்  சேலையை மின்விசிறியில் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி உமா மகேஸ்வரி செல்வபுரம் போலீசில் புகார் செய்தார்.சப் இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.