இந்து முன்னணி பிரமுகருக்கு கொலை மிரட்டல்: கொலை முயற்சி வழக்கு தொடர்புடைய நபர் மீண்டும் கைது..!

கோவை செல்வபுரம் நகர இந்து முன்னணி பிரமுகர் சூர்யா பிரசாத் என்பவருக்கு கொலை மிரட்டல் விட்டதாக பைசல் என்பவரை செல்வபுரம் காவல் துறை கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே பைசலை ரயில் நிலையம் பகுதியில் கத்தியால் குத்திய வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், செல்வபுரம் பகுதியில் பேக்கரியில் இருந்த சூர்யாவை, பைசலை பார்த்து நக்கல் சிரிப்பு சிரித்ததுடன் தான் கத்தியால் குத்திய சம்வத்தை நினைவு படுத்தி உள்ளார். இதனை அடுத்து ஆத்திரமடைந்த பைசல் சூரியாவிற்கு கொலை மிரட்டல் விடுத்து உள்ளார். இதனைத் தொடர்ந்து செல்வபுரம் காவல் துறையினரிடம் சூரியா பிரசாத் அளித்த புகாரின் அடிப்படையில் பைசலை கைது செய்த செல்வபுரம் காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.