தமிழ்நாடு மின்சார வாரியத்தை இயக்குவது நான் தான்… என சொல்லி ரூ.1 கோடி ஏமாற்றிய கேடி ஆசாமி கைது..!!

சென்னை: தமிழ்நாட்டில் வேலை வாங்கித் தருகிறேன் என எப்படி எல்லாம் ஏமாற்றலாம் என மோசடி கும்பல் பெருகிவிட்டது.

இது குறித்து ஆவடி போலீஸ் கமிஷனர் கி. சங்கர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ஆவடி மற்றும் போலீஸ் கமிஷனர் கட்டுப்பாட்டில் கீழ் உள்ள நகரங்களில் அரசு வேலை வாங்கித் தருவதாக பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து கோடிக்கணக்கில் லட்சக்கணக்கில் ஏமாற்றி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த கும்பலிடம் ஏமாறாமல் இருக்க உஷார் படுத்தப்பட்டுள்ளது. ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் போலீஸ் கமிஷனர் சங்கரை சந்தித்த ரகு தகப்பனார் பெயர் போஸ் 2.கோபிநாத் 3.கண்ணன்4. மணிகண்டன்5. ஜெரால்டு ம ஜெல்லா ஜெயந்த் ஆகியோர்களிடமிருந்து கார்த்திகேயன் என்பவன் தமிழ்நாட்டு அரசை இயக்குவது நான்தான் எனக்கு மின்வாரிய சேர்மன் மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ரொம்ப ரொம்ப நெருக்கம் என போலியாக சொல்லி மின்சாரத் துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாக ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வாங்கிக் கொண்டு ஏமாற்றியுள்ளான் . கொடுத்த பணத்தை திருப்பி கேட்டால் ஒரு கோடி ரூபாய் தானே மிஸ்டர். இது எல்லாம் பெரிய அமௌன்ட்டா கிண்டல் பேசியுள்ளான். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க புகார் மனு அளிக்கப்பட்டது. மத்திய குற்றப்பிரிவு வேலைவாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர் . வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் மிகப்பெரிய பிராடு கொள்ளைக்காரன் அருள்ஜோதி வயது 45. தகப்பனார் பெயர் மணி என்பவனை கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடுவர் முன்பாக ஆஜர்படுத்தப்பட்டான். பதிவு செய்யப்பட்ட வழக்கின் ஆவணங்களை சரிபார்த்த நடுவர் குற்றவாளி அருள்ஜோதியை புழல் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார். குற்றவாளி அருள்ஜோதியை பார்த்த பொதுமக்கள் ஒரு கோடி ரூபாய் ஏமாற்றியவனா இவன் அறுத்து போட்டால் பத்து ஊருக்கு தூவ லாம் என சாபமிட்டனர்…