இந்தியாவிற்கு அடித்தது ஜாக்பாட்… டன் கணக்கில் லித்தியம் படிவுகள் கண்டுபிடிப்பு – ஆய்வு மையம்..!

ந்தியாவில் முதன்முறையாக லித்தியம் படிவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்திய புவியியல் ஆய்வு மையம் (GSI) தெரிவித்துள்ளது.

ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் ரியாசி மாவட்டத்தில் உள்ள சலால்-ஹைமானா பகுதியில் 5.9 மில்லியன் டன் லித்தியம் வளங்கள் (ஜி3) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுரங்க அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டிலேயே லித்தியம் வளங்கள் கண்டுபிடிக்கப்படுவது இது தான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி, மும்பை உள்ளிட்ட மெட்ரோ நகரங்களில் மின்சார கார்களில் அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருவதால், லித்தியம் இருப்பு இந்தியாவிற்கு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. பேட்டரிகளில் பெரும்பாலும் இந்த லித்தியம் என்பது பயன்படுத்தப்படுகிறது. லித்தியம், தங்கம் உள்ளிட்ட 51 கனிமத் தொகுதிகள் மாநில அரசுகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக சுரங்கத்துறை அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.

51 கனிமத் தொகுதிகளில், 5 தொகுதிகள் தங்கம் மற்றும் பொட்டாஷ், மாலிப்டினம், அடிப்படை உலோகங்கள் போன்ற பொருட்கள், ஜம்மு & காஷ்மீர் (UT), ஆந்திரப் பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத், ஜார்கண்ட், கர்நாடகா, மத்திய பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய 11 மாநிலங்களில் பரவியிருக்கின்றன. இந்த நிதியாண்டில், 12 கடல் கனிம ஆய்வுத் திட்டங்கள், 318 கனிம ஆய்வுத் திட்டங்கள் உட்பட 966 திட்டங்களை GSI மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்தது.