தமிழக பாஜகவில் கடந்த சில நாட்களாகவே நிலவி வந்த உச்சக்கட்ட பரபரப்புகளுக்கு இடையே, அண்ணாமலை அவர்கள் பாஜகவில் இருந்து விலகுவதற்காகத் தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துள்ளார்.
டெல்லியில் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் ஆகியோரைச் சந்தித்த அண்ணாமலை, தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துவிட்டு, கட்சி தொடங்குவது என்ற தனது முடிவில் எவ்வித மாற்றமும் இல்லாமல் உறுதியாக இருப்பதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.
பாஜக மேலிடம் சமாதானம் செய்த போதிலும் அண்ணாமலை தனது முடிவில் பிடிவாதமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. அவர் இப்போதே புதிய கட்சியைத் தொடங்கவில்லை என்றாலும், “புதிய கட்சி தொடங்கப் போகிறார்” என்ற ஒரு தகவல் மட்டும் தற்போது அரசியல் வட்டாரங்களில் பரவி வருகிறது. அதன்படி, முதற்கட்டமாக ஒரு புதிய இயக்கத்தைத் தொடங்கி, அதன் நிர்வாகிகளுக்கு சுமார் ஒன்றரை ஆண்டுகள் தீவிர அரசியல் பயிற்சி அளிக்கப் போவதாகவும், அதன்பிறகே அதனை முழுமையான அரசியல் கட்சியாக மாற்றப் போவதாகவும் அண்ணாமலை திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.இந்தத் திட்டமிட்ட புதிய கட்சித் தொடக்கம் மற்றும் தனது அடுத்தகட்ட அரசியல் நிலைப்பாடு குறித்து நாளை (ஜூன் 5) செய்தியாளர்களைச் சந்தித்து அண்ணாமலை அறிவிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த அதிரடி யூகங்கள் தற்போது அல்காரிதம்களை அதிர வைத்து அரசியல் களம் மற்றும் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது







