மாணவர்களின் உடல் மற்றும் விளையாட்டுத் திறனை அறிய புதிய செயலி அறிமுகம்- அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் .!

பள்ளி மாணவர்களின் உடல் மற்றும் விளையாட்டுத் திறனை அறிய பள்ளி கல்வித்துறை சார்பில் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உலகத் திறனாய்வு உடன் திறன் தேர்வு போட்டிகள் பள்ளி கல்வித்துறை சார்பாக இன்று தொடங்கியது. திருப்பூரில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற போட்டியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், 6 ,7 மற்றும் 8ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் படிப்பில் அல்லாமல் விளையாட்டு போன்ற துறைகளிலும் தங்கள் திறமைகளை கொண்டு வரவே இது போன்ற போட்டிகள் நடத்தப்படுகிறது.

விளையாட்டு என்று வரும்போது உடல் ரீதியாகவும் சரி, மனரீதியாகவும் சரி நாம் பல பட வேண்டும். மாணவர்கள் அதை பெறும் போது சமூகமும் அதை பெறும். விளையாட்டில் அதிகம் ஈடுபடும்போது உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் சுறுசுறுப்பு அடைவதன் மூலம் படிப்பிலும் அதிக கவனம் செலுத்தலாம். மாணவர்களின் திறனை அறிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.உலக திறனாய்வு உடற்திறன் தெரிவுபோட்டிக்கான செயலி மூலம் மாணவர்களின் திறன் கண்காணிக்கப்பட்டு அவர்களை தேர்வு செய்வதோடு, விளையாட்டு பயிற்சிக்கான செலவை பள்ளி கல்வித்துறையை ஏற்கும் என்றார்.