கோவையில் மனைவி,2 குழந்தகைளை தவிக்க விட்டு இளம் பெண்ணுடன் கணவர் ஓட்டம்-கள்ளகாதலால் நேர்ந்த விபரீதம்..!

கோவை ஆர்.எஸ்.புரம் அருகே உள்ள காமராஜபுரத்தை சேர்ந்த 36 வயது பெயிண்டர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

இவருக்கு அந்த பகுதியில் வசித்து வந்த இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி ஜாலியாக இருந்து வந்தனர். இந்த கள்ளக்காதல் விவகாரம் பெயிண்டரின் மனைவிக்கு தெரிய வந்தது. அவர் தனது கணவரை கண்டித்தார். மேலும் இளம்பெண்ணுனடான கள்ளக்காதலை கைவிடுமாறு கூறி வந்தார். இதனால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது.

சம்பவத்தன்று பெயிண்டர் தனது மனைவியிடம் வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு வர வில்லை. அக்கம் பக்கத்தில் தேடிய போது தனது கணவர் இளம்பெண்ணுடன் ஓட்டம் பிடித்தது தெரிய வந்தது.

இது குறித்து அவர் இளம்பெண்ணுடம் ஓட்டம் பிடித்த தனது கணவரை கண்டு பிடித்து தரும்படி ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவி மற்றும் குழந்தைகளை விட்டு இளம்பெண்ணுடன் ஓட்டம் பிடித்த பெயிண்டரை தேடி வருகிறார்கள். இதேபோல இளம்பெண்ணின் பெற்றோரும் மாயமான தங்களது மகளை கண்டு பிடித்து தரும்படி போலீசில் புகார் செய்து உள்ளனர்.