கோவையில் ஒரே நாளில் 2 மாணவிகள், 2 மாணவர்கள் திடீர் மாயம்..!

கோவையில் ஒரே நாளில் 4 மாணவ – மாணவிகள் மாயம்…

கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார். இவரது மகள் சத்யா (வயது 20) சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று இவர் வீட்டில் இருந்து திடீரென்று மாயமாகிவிட்டார். இது குறித்து கவுண்டம்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது .போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.

இதே போல கவுண்டம்பாளையம் சக்தி நகரை சேர்ந்தவர் காமராஜ் . இவரது மகன் யோகேஸ்வரன் ( வயது 8 )அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் படித்து வருகிறான். நேற்று விளையாடுவதற்காக வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து தாயார் திலகவதி கவுண்டம்பாளையம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.

இதேபோல குனியமுத்தூர் சேர்ந்த 14 வயது மாணவி நேற்று திடீரென்று மாயமாகிவிட்டார் . இது குறித்து குனியமுத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

இதே போல தஞ்சாவூர் பள்ளி அக்ரகாரம், பூஞ்சோலை நகரை சேர்ந்தவர் செய்யது முகமது , இவரது மகன் காசிம் மொய்தின் (வயது 23) கோவை பீளமேட்டில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பி. இ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.விடுதியில் தங்கி உள்ளார். நேற்று திடீரென்று மாயமாகிவிட்டார். இது குறித்து இவரது தந்தை செய்யது முகம்மது பீளமேடு போலீசில் புகார் செய்துள்ளார் . போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்..