இன்னும் 2 வாரங்களில் கொரோனா பாதிப்பு உச்சம் தொடும் – டெல்லி மருத்துவமனை இயக்குனர் அதிர்ச்சி தகவல்.!

மீப நாட்களாக நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் டெல்லியை மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் பணியாளர்கள் கடைபிடிக்கவேண்டிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 1,119 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என சுகாதாரத்துறை கூறியுள்ளது. இது குறித்து டெல்லி எஸ் எம் ஜே பி மருத்துவமனை இயக்குனர் டாக்டர் சுரேஷ்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது, முக கவசங்களை மருத்துவமனையில் அணிய வேண்டியது கட்டாயம்.

டெல்லி அரசின் 2000 படுக்கை வசதிகளுடன் கூடிய மிகப் பெரிய மருத்துவமனையாக உள்ளது. நம் அனைவரும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலும் பிறந்து 18 நாட்கள் ஆன குழந்தை ஒன்றும் கொரோனா பாதிப்பு சிகிச்சை பெற்று வருகிறது என தெரிவித்துள்ளார். இதனையடுத்து இன்னும் ஓரிரு வாரங்களில் டெல்லியில் கொரோனா பாதிப்பு உச்சம் தொடும் அதன் பின் தொற்று எண்ணிக்கை சரியும் என தெரிவித்துள்ளார். இருப்பினும் மக்கள் பயப்பட வேண்டாம் எனவும் சரியான கொரோனா தடுப்பு நடைமுறைகளை கடைபிடிக்கும் படியும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.