இந்து மகாசபா தென்பாரத ஒருங்கிணைப்பாளர் வீட்டு காவலாளிக்கு அடி உதை – 3 பேர் கைது..!

கோவை பன்னிமடை ஆண்டாள் அவன்யூ பகுதியில் அகில பாரத இந்து மகாசபா தென் பாரத ஒருங்கிணைப்பாளர் கே சுபாஷ் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவருடைய வீட்டின் காவலாளி கதிர்வேல்( 68 )பணியில் இருந்தார். நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் சிலர் வீட்டின் முன்பு வந்துள்ளனர்.இது பற்றி காவலாளி விசாரித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்தவர்கள் கதிர்வேலை சரமாரியாக தாக்கி உள்ளனர். சத்தம் கேட்டு வந்தவர்கள் மர்ம நபர்களை பிடித்து தடாகம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் கதிர்வேல் சுபாஷ் வீட்டிலிருந்த பாயாசத்தை இரவு நேரத்தில் கொடுத்துள்ளார். இது பற்றி பிரபாகரன் கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த பிரபாகரன் மற்றும் சிலர் சேர்ந்து கதிர்வேலை தாக்கியுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் தடாகம் போலிஸார் தாக்குதலில் ஈடுபட்ட வேலுசாமி என்பவரின் மகன் கிஷோர்( 27) மேகநாத்( 23) வசந்தகுமார் (22 )ஆகிய 3 பேரை கைது செய்தனர்.மேலும் வழக்கு தொடர்புடைய பிரபாகரன்( 54) அவரது மகன் சுபாஷ்( 21) மனைவி தீபா (43) ஆகியோரை தேடி வருகின்றனர்