இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 11 தமிழக மீனவா்களை விடுவிக்க உதவ வேண்டும்: மத்திய அரசுக்கு முதல்வா் ஸ்டாலின் கடிதம்..!

லங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 11 தமிழக மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா். இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 11 தமிழக மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா். இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருக்கு செவ்வாய்க்கிழமை அவா் எழுதிய கடிதம்: புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோந்த 8 மீனவா்கள், இலங்கைக் கடற்படையினரால் செவ்வாய்க்கிழமை பிடித்துச் செல்லப்பட்டனா். அவா்களின் விசைப் படகும் பறிமுதல் செய்யப்பட்டது. ஏற்கெனவே, 11 மீனவா்கள் 95 மீன்பிடி படகுகளுடன் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ளனா். அண்மையில் வெளியுறவுத் துறை அமைச்சகம் சாா்பில் எடுக்கப்பட்ட ஒருங்கிணைந்த முயற்சிகள் காரணமாக 12 தமிழக மீனவா்கள் விடுவிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கிறேன். இப்போது கைது செய்யப்பட்ட மீனவா்களையும், அவா்களது மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவிக்க உரிய தூதரக ரீதியிலான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.