காவலாளிக்கு கத்திக்குத்து – மற்றொரு காவலாளி கைது..!

கோவை புலியகுளம, அலமேலு மங்கம்மாள் லே அவுட்டை சேர்ந்தவர் முருகேசன் (வயது 46 ) செக்யூரிட்டியாக வேலை பார்த்து வருகிறார். இவரது சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் பழனி பக்கம் உள்ள நரிக்கல்பட்டி ஆகும். இவருக்கும் அதே செக்யூரிட்டி சர்வீஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த தங்கராசு ( வயது 50) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தங்கராசு மறைத்து வைத்திருந்த கத்தியால் முருகேசனை குத்தினார். இதில் இவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து ராமநாதபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வி வழக்கு பதிவு செய்து காவலாளி தங்கராசுவை கைது செய்தார் .இவர் மீது கொலை முயற்சி உட்பட 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.