திருமண வீட்டில் புதுமாப்பிள்ளையின் செயின்கள் திருட்டு – அழகு நிபுணர் கைது..!

கோவை அருகே உள்ள கோவில்பாளையம், எஸ் எஸ் குளம் ,காரமடை ரோட்டை சேர்ந்தவர் விஜயன் இவரது மகன் தீபக் (வயது 31) தனியார் கம்பெனியில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார்.அவருக்கு 2-7- 23 அன்று கோவில்பாளையத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்க இருந்தது..தனக்கு முடி அலங்காரம் செய்வதற்காக சென்னையிலிருந்து தேனி பெரியகுளம் வடகம்பட்டியை சேர்ந்த பாலகுமார் ( வயது 32) என்பவரை 10 ஆயிரம் சம்பளத்திற்கு அழைத்து வந்தார்..இவர் மணமகன் அறையில் இருந்த செயின், கைச்செயின் ஆகியவற்றை நைசாக திருடிசென்று விட்டார். இது குறித்து தீபக் கோவில்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் பாலகுமாரை நேற்று கைது செய்தனர்.இவரிடமிருந்து 3 பவுன்எடை கொண்ட தங்கச் செயின்கள் மீட்கப்பட்டது..