கொச்சி விமான நிலையத்தில் ரூ.48.5 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்..!

கேரளா மாநிலத்தில் உள்ள கொச்சி விமான நிலையத்தில் பல்வேறு நாடுகளில் இருந்து பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், இன்று விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வந்த பயணி ஒருவரிடமிருந்து சுங்கத்துறையின் வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் ரூ.48.5 லட்சம் மதிப்புள்ள 1,192 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

விமான நிலையத்தில் உள்ள சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் படி, துபாயில் இருந்து ஐஎக்ஸ்-434 விமானம் மூலம் கொச்சி விமான நிலையத்திற்கு வந்த கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த அலி என்பவரை சோதனை செய்தனர்.

அந்த சோதனையின் போது, அவரிடமிருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்த 1,010 கிராம் எடையுள்ள நான்கு தங்க காப்சூல்கள் மற்றும் அவரது காலுறைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 182 கிராம் எடையுள்ள மூன்று தங்கச் சங்கிலிகள் பறிமுதல் செய்யப்பட்டன.