35 துண்டுகளாகவெட்டப்பட்ட காதலி .. சைக்கோ கில்லர் டெக்ஸ்டர்’-ஐ பார்த்துதான் செய்தேன்… காதலன் பரபரப்பு வாக்குமூலம்… அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்..!

டெல்லி இளம்பெண் கொலை வழக்கில் காதலனை அழைத்துக்கொண்டு 35 துண்டான காதலியின் தலை உள்பட உடல் பாகங்கள் வீசப்பட்ட இடங்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கடந்த 2019ம் ஆண்டு மும்பை பால்கர் பகுதியை சேர்ந்த ஷிரத்தா (26) என்பவர் கால் செண்டர் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். அப்போது அஃப்தாப் அமீன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அது காதலில் முடிந்தது.

அஃப்தாப் வேறு மதத்தை சேர்ந்தவர் என்பதால், ஷிரத்தாவின் பெற்றோர்கள் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் பெற்றோர்களை உதறி தள்ளிய ஷிரித்தா, அமீனுடன் மும்பையில் தனி வீட்டில் லிவ்-இன் முறையில் வாழ்ந்து வந்துள்ளார். ஹரித்தாவின் பெற்றோர்கள் மும்பையில் வசித்து வந்ததால், அவர்கள் தொந்தரவு செய்ய வாய்ப்புள்ளதாக கருதிய காதலர்கள் யாருக்கும் தெரியாமல் டெல்லிக்கு இடம் பெயர்ந்தனர்.

அஃப்தாப் டெல்லியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் சமையல்காரராக பணியாற்றியுள்ளார். டெல்லியில் உள்ள மஹரவுலி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருவரும் வசித்து வந்துள்ளனர். அப்போது அஃப்தாப்பிற்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதை அறிந்த ஷிரத்தா, தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தினமும் இரவில் ஷிரத்தாவை அஃப்தாப் அடித்து துன்புறுத்தியுள்ளார். இது குறித்து பெற்றோரிடம் சொல்ல முடியாத ஷிரத்தா, தனது பள்ளி பருவ நண்பரான லட்சுமணன் என்பவரிடம் பகிர்ந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக லட்சுமணனால் ஷிரத்தாவை தொடர்பு கொள்ள முடியாமல் போனது. அவர் செல்போன் எண் ஸ்விட்சு ஆப் செய்யப்பட்டிருந்தது. அவரது சமூகவலைதள பக்கங்கள் முடங்கி இருந்தன. இதனால் சந்தேகம் அடைந்த லட்சுமணன், ஷிரத்தாவின் அண்ணன் ஸ்ரீஜெய் விகாஸிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து ஷிரத்தாவின் தந்தை மஹாராஷ்டிரா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த 8ஆம் தேதி மகளை தேடி விகாஸ் டெல்லி சென்றுள்ளார். ஷரித்தா வசித்து வந்த வீடு பூட்டியிருந்தது. அப்போது டெல்லி மஹரவுலி காவல் நிலையில் புகார் அளித்துள்ளார்.

டெல்லி காவல்துறையில் விரைந்து செயல்பட்டு அஃப்தாபை தேடி கண்டுபிடித்து கைது செய்தனர். அப்போது கொலை செய்ததை ஒப்புக்கொண்ட அஃப்தாப் அதிர்ச்சிகரமான வாக்குமூலம் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், தானும் ஷிரத்தாவும் டெல்லியில் லிவ்விங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்ததாகவும் அப்போது ஷிரத்தா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதாகவும் தெரிவித்தார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த மே 18 ஆம் தேதி சண்டை பெரிதாகி, ஷிரத்தாவை அஃப்தாப் தாக்கியபோது அவர் கத்தி கூக்குரல் எழுப்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அஃப்தாப், ஷிரத்தாவின் வாயையும் மூக்கையும் தலையணை கொண்டு நீண்ட நேரம் அழுத்தியுள்ளார். அதில் ஷிரத்தா துடிதுடித்து இறந்தார்.

இதனை யாருக்கும் தெரியாமல் மறைக்க திட்டமிட்ட அஃப்தாப், 300 லிட்டர் ப்ரிட்ஜை வாங்கியுள்ளார். அடுத்து தான் வேலை பார்கும் நட்சத்திர ஓட்டலுக்கு சென்று கறி வெட்டும் கத்தியை எடுத்து வந்து, ஷிரத்தாவின் கைகளை 3 துண்டாகவும் கால்களை 3 துண்டாகவும் உடலை மொத்தமாக 35 துண்டுகளாகவும் வெட்டியுள்ளார்.

பின்னர் அந்த துண்டுகளை பிளாஸ்டிக் கவரில் போட்டு பிரிட்ஜில் வைத்துள்ளார். பின்னர் தினமும் இரவு 2 மணிக்கு வெளியே சென்று ஒவ்வொரு துண்டாக நாய்களுக்கு வீசி எறிந்துள்ளார். வீட்டில் துர்நாற்றம் வீசாமல் இருக்க தினமும் ஊதுபத்திகளை கொளுத்தி வைத்துள்ளார்.

மேலும் அமெரிக்க சைக்கோ கில்லர் தொடரான ‘டெக்ஸ்டர்’-ஐ பார்த்துதான் இவ்வாறு துண்டுத்துண்டாக வெட்டி வீசியதாக கூறினார். டெக்ஸ்டரும் இதே போன்று தான் கொல்லும் ஆட்களை வெட்டி பிளாஸ்டிக் கவரில் போட்டு கால்வாயில் தூக்கி வீசுவார். அதேபோல் செய்தால் கொலையில் இருந்து தப்பிவிடலாம் என நினைத்து அஃப்தாப் இவ்வாறு செய்துள்ளார்.

அடுத்தக்கட்ட அதிர்ச்சியாக ஷிரத்தாவின் நண்பர்கள் பரபரப்பு தகவலை அளித்துள்ளனர். அதில், ஷிரத்தா கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்களை தொடர்பு கொண்டு என்னை கூட்டி செல்லுங்கள் இல்லையென்றால் அவன் என்னை கொன்று விடுவான் என கூறியதாக தெரிவித்துள்ளனர்.

ஷிரத்தா கூறியதை கேட்டு அச்சமடைந்த அவர்கள், ஷிரத்தா மற்றும் அஃப்தாப்பை அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி சத்தம் போட்டுள்ளனர். அவளை சித்ரவை செய்தால் போலீசில் புகார் அளித்து விடுவோம் எனவும் மிரட்டி அவர்களை அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் ஷிரத்தாவோடு தொடர்பில் இல்லாமல் போயுள்ளதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இந்த வாக்குமூலத்தை பதிவு செய்த போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.