பணம் வைத்து சூதாட்டம் – 6 பேர் கைது..!

கோவை : மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு ரேஷன் கடை அருகே பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக மேட்டுப்பாளையம் போலீசுக்கு தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியதாக அன்னூர் ரோட்டை சேர்ந்த கண்ணன் ( வயது 45 )சேரன் நகர் செந்தில்குமார் ( வயது 39) குமாரபுரம் ரஞ்சித் குமார் ( வயது 30) அன்னூர் ரோடு கணேசன்
(வயது 36)சேரன் நகர் சேகர் (வயது 35 )குரும்பனூர் செந்தில்குமார் (வயது 41) ஆகியோர் கைது செய்யப்பட்டனர் .சீட்டாட பயன்படுத்தப்பட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டது..