கடும் வெயிலில் பணிபுரியும் அனைத்து காவலர்களுக்கும் இலவச நீர் மோர் பந்தல் : சிறைதுறை நிர்வாகம் அறிவிப்பு- வீடியோ இணைப்பு..!

கடும் வெயிலில் பணிபுரியும் அனைத்து காவலர்களுக்கு இலவச நீர் மோர் பந்தல்- சிறைத்துறை நிர்வாகம் அறிவித்துள்ளது..!

தமிழ்நாட்டில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து உள்ளது. கடும் வெயிலில் இருந்து விடுபடும் வகையில், அனைத்து  சிறை துறை காவலர்களுக்கு இலவச மோர் மற்றும் நன்னாரி சர்பத் பழச்சாறு ஆகியவை வழங்க சிறை துறை டிஜிபி அம்ரேஷ் பூசாரி கூறினார் . பணியில் உள்ள காவலர்களுக்கும் மற்றும் மத்திய சிறை சாலை செல்லும் காவலர்களுக்கும் என அனைத்து மாவட்ட சிறைத்துறை காவலர்களுக்கும் இலவச மோர் மற்றும் நன்னாரி சர்பத் பழச்சாறு ஆகியவை வழங்கப்பட்டது. இதை அனைத்து காவலர்களும் மகிழ்ச்சியுடன் குடித்து சென்றனர் . கோடை காலம் முடியும் வரை அனைத்து மத்திய சிறை துறை காவலர்களுக்கும் வழங்கப்படும்.  சிறை துறை நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து அதிகாரி கூறுகையில் … தமிழ்நாடு சிறை துறை டிஜிபி அம்ரேஷ் பூசாரி பல்வேறு நல்ல திட்டங்களை கொண்டு வந்தார் . அதன் ஒரு பகுதி தான் இந்த இலவச நீர் மோர் பந்தல் திட்டம் .கடும் வெயிலில் மக்கள் பணியாற்றும் அனைத்து மத்திய சிறை துறை காவலர்களின் உடல் நிலை பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சி ஆகும். இந்த முயற்சிக்கு அனைத்து காவலர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பொது மக்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர் என்று அதிகாரி கூறினார்..