பெண்ணிடம் ரூ.5 லட்சம் கடன் வாங்கி மோசடி- போலீசில் புகார்..!

கோவை சீர நாயக்கன்பாளையம், பாரதியார் விதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி வித்யா ( வயது 32) இவர் கோவை சவுரிபாளையம் வேளாங்கண்ணி நகரை சேர்ந்த சார்லஸ் (வயது 34) என்பவருக்கு ரூ 5 லட்சம் கடன் கொடுத்திருந்தார்.கூகுள் பேமூலம் இந்த பணத்தை அனுப்பி வைத்தார்.பணத்தைப் பெற்றுக் கொண்ட சார்லஸ் திரும்ப கொடுக்கவில்லை. ஏமாற்றிவிட்டார் .இது குறித்து வித்யா பீளமேடு போலீசில் புகார் செய்தார் போலீசார் சார்லஸ் மீது மோசடி வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.