12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்காக… கல்லூரிக் கனவு நிகழ்ச்சி இன்று தொடக்கம்.!!

மிழ்நாட்டில் மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி குறித்து வழிகாட்டும் நிகழ்ச்சி இன்று தொடங்குகிறது. இதனை அனைத்து மாவட்டங்களிலும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சிபெற்று உயர்கல்விக்கு செல்லும் மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்விக்கான வாய்ப்புகள் குறித்து வழிகாட்டும் வகையில், கல்லூரி கனவு நிகழ்ச்சியை, கடந்த 2022-ஆம் ஆண்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். நான் முதல்வன் திட்டத்தின் ஓர் அங்கமாக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

இந்நிலையில், பிளஸ் டூ பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானதைத் தொடர்ந்து, இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி இன்று தொடங்க உள்ளது. இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் பிரத்யேக நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பிரிவு வாரியாக உயர்கல்வியில் உள்ள படிப்புகள், டிப்ளமோ படிப்புகள், வேலைவாய்ப்புகள் ஆகியவை குறித்து மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து பள்ளிகளில் ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டு, உயர்கல்விக்கு விண்ணப்பிப்பதற்கான ஆலோசனை வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.