நொய்யல் ஆற்றில் வெள்ளம் பெருக்கு : இருந்த போதிலும் நிரம்பதா சூலூர் குளங்கள்..!!

கோவை மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக மேற்குத் தொடர்ச்சி மற்றும் அதனைெயாட்டிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நொய்யல் ஆறானது வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் தொடங்கி சூலூர், திருப்பூர் வழியாக 180 கிலோ மீட்டர் பயணம் செய்து கரூரில் காவிரி ஆற்றில் கலக்கிறது. நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது அந்த ஆறு பயணிக்க கூடிய ஊர்களில் உள்ள குளங்களும் நிரம்புவது வழக்கம். சூலூரில் ஆச்சான் குளம், சூலூர் குளம், இருகூர் குளம் நீலாம்பூர் குளம் போன்றவை உள்ளன. இந்த குளங்கள் அனைத்தும், நொய்யல் ஆற்றில் வெள்ளம் ஏற்படும் போது நிரம்பும். ஆனால் தற்போது நொய்யல் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டிருந்தாலும் இந்த குளங்களுக்கு தண்ணீர் வருவதில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே குளங்களில் இருந்த நீர் மட்டுமே தற்போது வரை உள்ளது.
இதற்கு முக்கிய காரணம் குளங்களுக்கு தண்ணீர் செல்லும் வாய்க்கால்கள் முறையாக பராமரிப்பின்றி கிடப்பதும், கழிவுநீர் கால்வாயாக மாறியதும் தான். 10 நாட்களில் இரண்டு முறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் இதுவரை தண்ணீர் வரவில்லை. அதே கழிவுநீர் மட்டுமே வருகிறது. இங்கு உள்ளவர்கள் குளத்தில் மீன் வளர்த்து வருவதால் அந்த மீன்கள் வெள்ளத்தில் அடித்து சென்றுவிடும் என்பதற்காக தடுத்து வைத்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆகாய தாமரைகள் தன்னார்வலர் மாரிமுத்து கூறியதாவது:- இங்குள்ள குளங்களில் தண்ணீர் நிரம்பாமல் கழிவு நீர் அதிகரித்து காணப்படுகிறது. இதனை சரி செய்து தர வேண்டும். மேலும் இங்குள்ள சூலூர், இருகூர் குளங்கள் ஆகாய தாமரைகளாக காட்சியளிக்கிறது. இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது நொய்யல் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டிருந்தாலும் இதுவரை இந்த குளங்களுக்கு தண்ணீர் வரவே இல்லை. தண்ணீர் வரும் கால்வாய்கள் முழுவதும் புதர்மண்டி கிடக்கிறது. இதனை சரி செய்து, தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.