பெண் இன்ஜினியரிடம் கத்தியை காட்டி மிரட்டி செயின் பறிப்பு..!

திருப்பூர் மாவட்டம் தொட்டியம் பக்கம் உள்ள நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் மணிமேகலை (வயது 26) இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிசைன் இன்ஜினியர் ஆக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் ஆர். எஸ். புரம். தடாகம் ரோட்டில் ஸ்ரீ சக்தி முத்துமாரியம்மன் கோவில்அருகே நடந்து சென்றார். அப்போது 4 சக்கர வாகனத்தில் வந்த ஒரு ஆசாமி கத்தியை காட்டி மிரட்டி இவரது கழுத்தில் கிடந்த 2 கிராம் தங்க டாலரை பறித்துச் சென்று விட்டார் .இது குறித்து மணிமேகலை ஆர். எஸ். புரம், போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மீனா குமாரி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.