பெண் பேருந்து ஓட்டுநர் பணியில் இருந்து நீக்கம்…

பெண் பேருந்து ஓட்டுநர் பணியில் இருந்து நீக்கம்…

கோவை காந்திபுரம் – சோமனூர் வழித் தடத்தில் ஓடும் தனியார் ஓட்டுநர் ஷர்மிளாவுக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஷர்மிளா ஓட்டுநர் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.

பேருந்தை வடவள்ளியை சேர்ந்த ஷர்மிளா (வயது 24) என்ற இளம்பெண் ஓட்டி வந்தார். தமிழகத்தில் தனியார் பேருந்தை ஓட்டும் முதல் பெண் ஓட்டுநர் என பலரும் பாராட்டினர். இந்த நிலையில் தி.மு.க எம்.பி., கனிமொழி, இன்று காலை பேருந்தில் ஏறி பயணித்ததுடன், பெண் ஓட்டுநர் ஷர்மிளாவை பாராட்டினார்.

 

இது குறித்து ஷர்மிளா கூறுகையில்:-

‘கனிமொழி என்னை வந்து பாராட்டினார். அவர் டிக்கெட் எடுத்து தான் பேருந்தில் பயணித்தார். கண்டக்டர் பயணிகளிடம் மரியாதைக் குறைவாக பேசினார். அவரிடம் மரியாதையாக பேசுமாறு அறிவுறுத்தினேன். பிறகு, பேருந்து உரிமையாளர் என்னிடம், நீ

பிரபலமாகுவதற்காக இதெல்லாம் செய்வாயா எனக் கூறி பணியில் இருந்து விலகுமாறு கூறினார்’ என்றார்.