16 வயது… பெற்ற மகள் என்று கூட பார்க்காமல் பலாத்காரம் செய்த தந்தைக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை- மகளும் தற்கொலை.!!

தாம்பரம் அடுத்த சுரேஷ் வயது 48 இவன் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவனுக்கு திருமணம் ஆகி 16 வயதில் மகள் உள்ளாள். கடந்த 2020 ஆம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த மகளை சித்திரவதை செய்து பலாத்காரம் செய்து விட்டான். இதை யாரிடமாவது சொல்லிவிட்டால் மகளையும் மனைவியையும் கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளான். இதுகுறித்து மடிப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிந்து காமவெறி பிடித்த சுரேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் மகள் விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொண்டார் . இது குறித்தும் போலீசார் தனியாக வழக்கு பதிவு செய்துள்ளனர் . போக்சோ நீதிமன்றத்தில் குற்றவாளி சுரேஷுக்கு ஏழு ஆண்டு தண்டனை நீதிபதி தமிழரசி தீர்ப்பு கூறினார் . சிறுமி தற்கொலை வழக்கில் குற்றவாளி சுரேசுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் 10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதம் கட்ட தவறினால் கூடுதலாக மூன்று மாத சிறை தண்டனையும் விதிக்க நேரிடும் என நீதிபதி தீர்ப்பளித்தார்..