கோவையில் மருத்துவமனை நடத்திய போலி டாக்டர் கைது..!!

கோவை சிங்காநல்லூர். நீலி கோணாம் பாளையம்பாளையத்தில் ஜோதி கிளினிக் என்ற பெயரில் போலி மருத்துவமனை செயல்படுவதாக மாவட்ட சுகாதா ரஅலுவலகத்துக்கு புகார் வந்தது. இணை இயக்குனர் டாக்டர் எம். ராஜசேகரன் சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அந்த மருத்துவமனையை நடத்தியது சிங்காநல்லூர் நந்தா நகரை சேர்ந்த தேவராஜ் (வயது 54) என்பது தெரியவந்தது. இவர் மருத்துவ படிப்பு படிக்காமல் இந்த கிளினிக்கை நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக தேவராஜ் கைது செய்யப்பட்டார் .இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..