பிரபல வழிப்பறி கொள்ளையன் கோவையில் கைது..!

கோவை சரவணம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் நேற்று விளாங்குறிச்சி ரோட்டில் வாகன சோதனை நடத்தினார்.அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர் பிரபல வழிப்பறி கொள்ளையன் என்பது தெரியவந்தது.இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் கோவை மாநகரில் 3 வழிப்பறி வழக்குகளிலும், மாவட்டத்தில் 2 வழிப்பறி வழக்கிலும் சம்பந்தப்பட்ட பிரபல கொள்ளையன்  என்பது தெரியவந்தது.இதையடுத்து இவர் கைது செய்யப்பட்டார். இவர் சாத்தூர் பக்கம் உள்ள கோவில் புலி குடியைச் சேர்ந்த நாகராஜ் மகன் ரஞ்சித் குமார் ( வயது 22) ஆவார்.டிப்ளமோ கேட்டரிங் படித்தவர்.புதுக்கோட்டையில் வேலை பார்த்து வந்த போது ஒரு இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக போக்சாவில் கைது செய்யப்பட்டு இருந்தார்.தற்போது ஜாமினில் வெளியே வந்துள்ளார்.இவர் கொள்ளையடித்த நகைகளை பாண்டிச்சேரியில் அடகு வைத்திருப்பதாக கூறினார்.இவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பதற்கு சரவணம்பட்டி போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.