கோவை காந்தி பார்க் ராமலிங்கம் காலனி ரோட்டை சேர்ந்தவர் சுகுமார். இவரது மகன் விக்னேஷ் ( வயது29)இவருக்கும் இவரது உறவினரான தடாகம் ரோடு, ராயப்பபுரத்தைச் சேர்ந்த தீப் சொரூப் என்ற பிர்லு (வயது 35) என்பவருக்கும், குடும்பத் தகராறு காரணமாக முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் விக்னேஷ் நேற்றுஅங்குள்ள, ராமலிங்கம் காலனி மைதானத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தீப் சொரூப் அவரிடம் தகராறு செய்தார். பின்னர் அவரை தாக்கி கத்தியால் குத்தினார். இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனை சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து தீப் சொரூப்பை தேடி வருகிறார்கள்.
குடும்ப தகராறு… வாலிபருக்கு கத்திக்குத்து- உறவினருக்கு வலைவீச்சு..!
