இருகூரில் கத்தியை காட்டி மிரட்டி எலக்ட்ரீசியனிடம் பணம் பறிப்பு.!!

கோவை அருகே உள்ள இருகூர், மார்க்கெட் ரோட்டை சேர்ந்தவர் விஜயராகவன் ( வயது 46) எலக்ட்ரீசியன் .இவர் நேற்று ஏ.ஜி. புதூர் ரோட்டில் உள்ள பொதுக் கழிப்பிடம் அருகே நடந்து சென்றார் .அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் இவரை வழிமறித்து பணம் கேட்டனர். அவர் கொடுக்க மறுத்தார். இதனால் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து 750 ரூபாயை பறித்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து விஜய ராகவன் சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரை தேடி வருகிறார்கள்.