உணவு சப்ளை செய்பவரிடம் கத்தி முனையில் பணம் பறிப்பு – பி.பி.ஏ பட்டதாரி கைது..!

கோவை அருகே குரும்பபாளையம்,சின்னத்தம்மன் நகரை சேர்ந்தவர் முத்துக்குமார் ( வயது 37 )
உணவு சப்ளை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று ஆர். எஸ் .புரம், சர். சண்முகம் ரோட்டில் நின்று கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர் முத்துக்குமாரிடம் பணம் கேட்டார். அவர் கொடுக்க மறுத்ததால் கத்தியை காட்டி மிரட்டி அவரது சட்டை பையில் இருந்த ரூ 4ஆயிரத்தை கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்று விட்டார். இது குறித்து முத்துக்குமார் ஆர் .எஸ். புரம். போலீசில் புகார் செய்தார் இன்ஸ்பெக்டர்ஆனந்த ஜோதி வழக்கு பதிவு செய்து சுக்கிரவார்பேட்டை தியாகராய புது வீதியைச் சேர்ந்த பிரமோத் என்ற ஸ்ரீ பிரமோத் (வயது 23) என்பவரை கைது செய்தார். இவர் பி.பி.ஏ. படித்துவிட்டு ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரிடமிருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.