திருமணம் நிச்சயிக்கப்பட்ட கோவை போலீஸ்காரர் தூக்கு போட்டு தற்கொலை-கள்ளக்காதல் காரணமா..?

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள பருத்தியூரைச் சேர்ந்தவர் திருமூர்த்தி. இவரது மகன் மணியரசு (வயது 35) இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு காவல்துறை
பணியில் சேர்ந்தார் கடந்த 2 ஆண்டுகளாக கோமங்கலம் காவல் நிலையத்தில் முதன் நிலை போலீஸ்காரராக பணியாற்றி வந்தார் .இந்த நிலையில் கடந்த மாதம் மணியரசுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே திருமண நிச்சயம் நடந்தது. அடுத்த மாதம் 1ஆம் தேதி திருமணம் நடக்க இருந்தது. இந்த நிலையில் திடீரென்று மணியரசு தனக்கு திருமணத்தில் விருப்பமில்லை என்று கூறியதாக தெரிகிறது. வீட்டில் உள்ளவர்கள் அவரை சமாதானம் செய்த போது இரவு பணிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். பின்னர் திரும்பி வரவில்லை .பெற்றோர் கோமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு அவரை தேடி வந்தனர். ஆனால் அவர் அங்கு இல்லாததால் பணியில் இருந்த போலீசார் அவரது செல்போனில் தொடர்பு கொண்டும் எடுக்கவில்லை. அவர் அருகில் உள்ள போலீஸ் குடியிருப்புச் சென்று ஓய்வெடுப்பது வழக்கம். இதனால் சந்தேகத்தின் பேரில் பெற்றோருடன் போலீசார் சென்று கதவைதட்டி பார்த்தனர் . திறக்கவில்லை. .இந்த நிலையில் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மின்விசிறியில் சேலையை கட்டி மணியரசு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது .இதையடுத்து அவரது உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்..இது குறித்த புகாரின் பேரில் கோமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் மணியரசுக்கு வேறு ஒரு திருமணமான பெண்ணுடன் காதல் இருந்து வந்துள்ளது. இதற்கிடையில் வீட்டில் பெற்றோர்கள் பார்த்த பெண்ணை திருமணம் செய்வதற்கு அவர் சம்மதம் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் அவருக்கு பிறந்தநாள் என்பதால் விடுமுறை எடுத்துள்ளார். மேலும் பெற்றோருடன் தனக்கு திருமணத்தில் விருப்பமில்லை என்று கூறியதாக தெரிகிறது. ஆனால் நிச்சயத்த பெண்னை திருமணம் செய்து கொள்ள பெற்றோர்கள் வற்புறுத்தியதால் மனம் உடைந்த மணியரசு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.போலீஸ்காரர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.