வீட்டின் முன் கோலம் போட்ட பெண்ணிடம் 6 பவுன் செயின் பறிப்பு ..!

கோவை ஒண்டிப்புதூர் பாட்ட கவுண்டர் வீதியை சேர்ந்தவர் சார்லி ஜோசப். இவரது மனைவி தனசீலி ( வயது 55) இவர் தனது வீட்டின் முன்கோலம் போட்டுக் கொண்டிருந்தார் . அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த ஒரு ஆசாமி அவரது கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டார். இது குறித்து தனசீலி சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..