குடிபோதையில் வெறிச்செயல்… கத்தியால் குத்தி மகன் படுகொலை – தந்தை கைது.!!

கோவை பேரூர் அருகே உள்ள கரடிமடை, வன்னியர் வீதியைச் சேர்ந்தவர் மாயன் (வயது 45) கூலிதொழிலாளி. குடிப்பழக்கம் உடையவர் . இவரது மகன் முகேஷ் (வயது 21) நேற்று மாலை குடிபோதையில் இருவரும் தகராறு செய்து கொண்டனர். அப்போது மகன் முகேஷ் குடிபோதையில் தந்தை மாயனை செம்பால் அடித்தாராம். இதனால் ஆத்திரமடைந்த மாயன் காய்கறி வெட்டும் கத்தியால் முகேசின் கழுத்து, மார்பு ஆகிய இடங்களில் குத்தினாராம் . இதில் முகேஷ் படுகாயம் அடைந்தார். .அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் . அங்கு சிகிச்சை அளித்தும் பலனிக்காமல் இன்று காலையில் இறந்தார். இது குறித்து பேரூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. பேரூர் டி.எஸ்.பி. வெற்றிச்செல்வன் மேற்பார்வையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தந்தை மாயனை இன்று கைது செய்தனர். இவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது..