மருந்து கடை அதிபரை கத்தியால் குத்தி கார் திருட்டு – 5 பேர் கைது…!

கோவை அருகில் உள்ள குனியமுத்தூரில் மெடிக்கல் ஸ்டோர் நடத்தி வருபவர் சோமசுந்தரம் (வயது 62)நேற்று முன்தினம் நள்ளிரவில்  5 ஆசாமிகள் இவரது வீட்டினுள் புகுந்து அவரை கத்தியால் குத்தி அங்கு நிறுத்தப்பட்டிருந்த அவரது காரை திருடி சென்று விட்டனர்.பணத் தகராறு  காரணமாக இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.காயமடைந்த மருந்து கடை அதிபர் சோமசுந்தரம் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து சோமசுந்தரம் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார் . போலீசார் வழக்கு பதிவு செய்து குனியமுத்தூர் பிரகாஷ் ( வயது 24) நாமக்கல் வரகூரைச் சேர்ந்த மணிவாசகம் (வயது 25) நாமக்கல் மாவட்டம் பட்டறை மேடு பாபு (வயது 33) குனியமுத்தூர் பேக்டரி வீதி சங்கர் (வயது 33) நாமக்கல் மாவட்டம் பவித்திரம் பகுதியை சேர்ந்த வரதராஜன் (வயது 23) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து கார் மீட்கப்பட்டது.