நொய்யல் ஆற்றில் மணல் திருடிய 3 பேர் கைது – வாகனம் பறிமுதல்..!

கோவை பக்கம் உள்ள ஆலாந்துறை பகுதியில் நொய்யல் ஆற்று படுகையில் அரசு அனுமதி இல்லாமல் மணல் எடுப்பதாக ஆலாந்துறை கிராம நிர்வாக அலுவலருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனை அடுத்து கிராம நிர்வாக அலுவலர் உட்பட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு 3 பேர் மணல் திருடி கொண்டிருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்களின் பெயர் கதிர்வேல், ராபூல் உசேன், நபி உசேன் என்பதும் அனுமதியின்றி மணல் எடுத்து கொண்டிருந்ததும் தெரிய வந்தது. இதனை அடுத்து 3 பேர் மீதும் ஆலாந்துறை காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் புகார் செய்தார். இதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட வாகனத்தின் உரிமையாளர் சுகுமார் என்பவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். மணல் கொள்ளைக்கு பயன்படுத்திய ஈச்சர் வாகனம் பறிமுதல் செய்யப்படுள்ளது..