100 போதை மாத்திரைகளுடன் 3 பேர் கைது..!

கோவையில் உள்ள கல்லூரி, பள்ளிக்கூடம் மற்றும் பூங்காக்கள் அருகே நின்று கொண்டு அங்குள்ள மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக பீளமேடு போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது .இந்த கும்பலை பிடிக்க பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் ஆவராம்பாளையம் சோபா நகர் மாநகராட்சி பூங்கா அருகே நேற்று ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்ததாக ஆவாரம்பாளையம் இளங்கோ நகரை சேர்ந்த சுஜித் ( 25 )ஜெகநாதபுரம் சிவ சூரியன் (23) புலியகுளம் , மருதாச்சலம் வீதியைச் சேர்ந்த வெங்கடேஷ் குமார் ( 22 )ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 100 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்..