செல்போன்களில் வரும் லிங்க்-ஐ தொடவே வேண்டாம்- டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை..!

செல்போன்களில் வரும் லிங்கை தொட வேண்டாம் என டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆன்லைன் மூலமாக புதுவிதமான மோசடிகள் அரங்கேறி வரும் நிலையில் இது குறித்து டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

செல்போன் மூலம் ஜி பே போன்ற செயல்களில் பணம் மோசடி நடந்து வருவதாக அவர் கூறினார். மேலும் அறியாத நபர்களிடமிருந்து வரும் லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் எனவும் அதன் மூலம் லட்சக்கணக்கில் பணத்தை இழக்கும் அபாயம் உள்ளதாக அவர் எச்சரித்தார்.