எப்படி அரசியல் செய்ய வேண்டும் என்று பாஜகவினருக்கு பாடம் எடுக்காதீர் – அண்ணாமலை பேச்சு..!

மிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தேரடி திடலில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

அப்போது பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “2024 நாடாளுமன்ற தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் வென்று மீண்டும் ஆட்சி அமைக்க உறுதிபூண்டு நம்முடன் மீண்டும் இணைந்துள்ளார் மைத்ரேயன். 6 நாடுகளை பின்னுக்கு தள்ளி 5 ஆவது பெரிய பொருளாதார நாடக உருவெடுத்து இருக்கிறோம். 9 ஆண்டுகளில் ஒரு இந்தியர் என்று சொல்லும் போது உலகம் நம்மை திரும்பி பார்க்கும் அளவுக்கு உயர்ந்தது இருக்கிறோம். அமெரிக்கா இன்று இந்தியாவை பார்க்கிறது என்று அமெரிக்கா தூதர் சொல்கிறார். இதற்கு முன்பு இந்தியா அமெரிக்காவை பார்க்கிறது என்று சொன்ன நிலை மாறி தற்போது அமெரிக்கா இந்தியாவை பார்க்கிறது என்ற நிலை உருவாகி உள்ளது. 9 ஆண்டுகளில் தமிழ் கலாச்சாரத்திற்கு நிறைய பெருமை கிடைத்திருக்கிறது.

கும்மிடி பூண்டி தாண்டி தமிழை கொண்டு செல்லாதது தான் திமுகவின் சாதனை. ஆனால் பிரதமர் தமிழை உலக அரங்கில் கொண்டு சென்றிருக்கிறார். செங்கோல் என்பது நேருவிடம் கை தடியாக மட்டும் தான் இருந்தது. ஆனால் மோடி செங்கோலை புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் முதல் குரலாக தமிழ் குரல் இருக்கக் வேண்டும் என்று மக்களவை சபாநாயகர் இருக்கையில் வைத்திருக்கிறார். 23 மொழிகளில் திருக்குறளை மொழி பெயர்க்க நடவடிக்கை எடுத்துள்ளார் பிரதமர். பேச்சு ஆபாசமாக இருக்கும் என்பதால் திமுக பொது கூட்டத்திற்கு பெண்கள் செல்வதில்லை. தொட்டு பார் என முதலமைச்சர் பேசி இருப்பதெல்லாம் குழாய் அடி சண்டையில் பேசுவது.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி எப்படி இருந்தது, இது தான் தைரியம். எவ்வாறு அரசியல் செய்ய வேண்டும் என்கிற பாடத்தை பாஜகவினருக்கு எடுக்காதீர்கள். தமிழ்நாட்டில் குடிக்கிற தண்ணீரில் மலம் கலந்தவர்களை இன்னும் பிடிக்கவில்லை. ஆனால் பாஜக மாநில செயலாளர் சூரியா என்ன செய்தார்?சமூக அக்கறையில் சமூக வலைதளத்தில் பதிவிட்ட சூரியாவை கைது செய்துள்ளீர்கள். ஆனால் யாருக்கும் பயப்படவில்லை என வீடியோவில் பதிவில் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்” என்றார்.