மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி..!

மாதவரம் தொகுதி சோழவரம் ஒன்றியம் செங்குன்றம் அடுத்த பாடிய நல்லூர் ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாரி சிலம்பம் கலைக்கூடம் சார்பில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி சிலம்ப ஆசான் முத்துமாரி தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இப்போட்டியில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட சிலம்ப மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு சிலம்பம் கம்பு, வேல் கம்பு, சுருள்வாள் போன்ற பழங்கால ஆயுதங்களை மாணவர்கள் மிக நேர்த்தியாக சுற்றிக் காட்டி வெற்றி பெற்றனர்.பின்னர் நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக சிலம்பக்கலை நூல் ஆசிரியர் பகவதி சந்திரசேகரன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சிலம்பம் மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் கோப்பையை வழங்கி வாழ்த்தினர்.இதில் பெற்றோர்கள், சக சிலம்பம் பயிற்சியாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.