காதலால் ஏற்பட்ட தகராறு : வாலிபருக்கு கத்திக்குத்து – அண்ணன், தம்பி கைது..!

கோவை வெள்ளலூர் ,ஹவுசிங் யூனிட்டில் வசிப்பவர் சிக்கந்தர் .இவரது மகன் சேக் முகமது (வயது 23) டிரைவர். இவர் நேற்று வெள்ளலூரில் உள்ள ஒரு பள்ளிக்கூடம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது இவரிடம் அதே பகுதியை சேர்ந்த லட்சுமணன் ( வயது 24) இவரது தம்பி நவீன் குமார் என்ற நவீன் (வயது 19) ஆகியோர் தகராறு செய்தனர். பின்னர் கத்தியால் குத்தினார்கள். இதில் ஷேக் முகமது படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். காதல் தகராறு காரணமாக இந்த மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து போத்தனூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து லட்சுமணன், அவரது தம்பி நவீன் குமார் என்ற நவீன் ஆகியோரை கைது செய்தனர் .அவர்கள் மீது கொலை முயற்சி உட்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.