அரசு பணிக்கான தேர்வுகளை மாநில மொழிகளில் நடத்த வேண்டி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..!!

கோவை:
மத்திய அரசின் அரசு பணியாளர்கள் தேர்வை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமல்லாது அந்தந்த மாநில மொழிகளில் நடத்த வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கோவை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசு நடத்தும் தேர்வுகளை அந்தந்த மாநில மொழிகளில் நடத்த வேண்டும், மாநில மொழியில் படித்தவர்களுக்கு அது வாய்ப்பாக அமையும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில பொருளாளர் பாரதி தலைமையில் பெண்கள் உள்பட, 40-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.