சத்தியமங்கலம் அருகே எட்டு அடி உயர பஞ்ச முக நாகலிங்க சிலை பிரதிஷ்டை- பிரதான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்..!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தனவாசி காடு பகுதியில் ஒரு கோடி சிவலிங்கங்கள் கொண்ட ஆலயம் நிர்மாணிப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது முதல் கட்டமாக அப்பகுதியில் 500க்கும் மேற்பட்ட சிவலிங்கங்கள் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே  மங்களநாதர் சிலை மற்றும் எட்டு அடி உயரம் கொண்ட ஐந்து முகங்கள் கொண்ட பஞ்ச முக நாகலிங்க சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த சிலையில் ஐந்து முகங்களிலும் நாகலிங்கம் இடம் பெற்றுள்ளது. காண்போர் கண்களுக்கு பரவசம் ஏற்படும் வகையில் அமைந்துள்ளது. ஓதுவார்கள் மந்திரம் முழங்க சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்..