சாலையில் கிடந்த ரூ.50 ஆயிரம் பணம் போலீசில் ஒப்படைப்பு- 3 பேரை வெகுவாக பாராட்டிய கமிஷனர் பாலகிருஷ்ணன்..!

கோவை வெரைட்டி ஹால் ரோடு-என்.எச். ரோடு சந்திப்பு அருகில் யாரோ ஒருவர் ரூ. 50 ஆயிரத்தை தவற விட்டு சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த அன்பழகன் (வயது 42) கணுவாய் ஜெகன் (வயது 20)காளப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த செல்லப்பாண்டி ஆகிய 3 பேரும் கீழே கிடந்த அந்த பணத்தை எடுத்தனர். தொலைத்தவர்கள் யாராவது தேடி வருகிறார்களா? என அங்கு நின்று பார்த்தனர். யாரும் வராததால் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனை நேரில் சந்தித்து பணத்தை ஒப்படைத்தனர். போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் 3 பேரின் நேர்மையை வெகுவாக பாராட்டினார் சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளரை அழைத்து மேற்கண்ட பணத்தை உரியவரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.