கஞ்சா விற்ற கல்லூரி மாணவர்கள் கைது..!

கோவை சரவணம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி, சப் இன்ஸ்பெக்டர் முத்து இருளப்பன் ஆகியோர் நேற்று சரவணம்பட்டி – துடியலூர் ரோட்டில் உள்ள தனியார் கல்லூரி அருகே ரோந்து சுற்றி வந்தனர் . அப்போது மறைவான இடத்தில் நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 2 கிலோ 200 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக இருவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் ஒருவர் தூத்துக்குடி மாவட்டம் , மடத்தூர் ரோடு, முருகேசன் நகரை சேர்ந்த வினீத் ( வயது 25) மற்றொருவர் கோவை கணபதிபுதூர் ஜெகன் ( வயது 27) என்பது தெரிய வந்தது. இவர்களில் வினித் கோவையில் உள்ள கல்லூரியில் பி.சி.ஏ படித்து வருகிறார்.