வீடு புகுந்து கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்- போக்சோவில் லாரி டிரைவர் கைது..!

கோவை அருகே உள்ள கோவில்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன். இவரது மகன் பிரசன்னா ( வயது 29) லாரி டிரைவர். இவருக்கு திருமணம் ஆகி மனைவியும் , 2 குழந்தைகளும் உள்ளனர். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருடன் காதல் ஏற்பட்டது. இதனால் பிரசன்னா சம்பவத்தன்று மாணவியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு தனியாக இருந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்து கோவில்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து டிரைவர் பிரசன்னாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..