சூலூரில் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை..

கோவை: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்தவர் மைக்கேல்ராஜ் (வயது 53 ) டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.இவர் சூலூர் பள்ளபாளையம் பாரதிபுரத்தில் குடும்பத்துடன் தங்கி உள்ளார். இவரது மகன் முருகேசன் (வயது 20) அங்குள்ள தனியார் கல்லூரியில் 3-ம்ஆண்டு படித்து வந்தார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் முருகேசன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து இவரது தந்தை மைக்கேல் ராஜ் சூலூர் போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்..