கோவை தண்டு மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா- நூற்றுக் கணக்கான பக்தர்கள் நேர்த்திக் கடன்…

கோவை – அவிநாசி சாலை உப்பிலிபாளைத்தில் உள்ள தண்டு மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 16 – ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து தினமும் பல்வேறு வாகனங்களில் அம்மன் திருவீதி உலா நடைபெற்று வருகிறது. அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. அப்போது பல்வேறு சீர்வரிசை பொருட்களை பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். தொடர்ந்து மலர் பல்லக்கில் அம்மன் திருவீதி உலா நடந்தது.

இதைத் தொடர்ந்து இன்று நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்வு துவங்கியது. இதில் நூற்றுக் கணக்கான பக்தர்கள் அக்னிச்சட்டி ஏந்தியும் பால்குடம் எடுத்தும் அலகு குத்தியும் ஊர்வலமாக செல்கின்றனர். கோனியம்மன் கோயிலில் இருந்து ஊர்வலமாக டவுன் ஹால், ஒப்பனைக்கார வீதி, லிங்கப்பசெட்டி வீதி,பால் மார்கெட்,
புரூக் பாண்டு ரோடு, நஞ்சப்பா ரோடு வழியாக தண்டு மாரியம்மன் கோவில் வந்து அடைந்தது. தண்டு மாரியம்மன் கோவில் ஊர்வலத்தில் பாதுகாப்பு பணிக்காக 200 – க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்..