கோவை இன்ஜினியரை தடியால் தாக்கி பைக் கொள்ளை..!

கோவை ஆவாரம்பாளையம் ரேஷன் கடை வீதியை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகன் விக்னேஷ் ( வயது 30) அந்த பகுதியில் உள்ள ஒரு பவுண்டரியில் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலையில் இவர் வேலை முடிந்து ஸ்கூட்டரில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள ரேஷன் கடை அருகே நின்று கொண்டிருந்த 2 பேர் இவரை வழிமறித்தனர். அவரிடம் செல்போனை தருமாறு கேட்டனர் . அவர் கொடுக்க மறுத்தார். இதனால் கீழே கிடந்த தடியால் அவரது தலையில் தாக்கினார்கள். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதில் அவர் நிலை குலைந்தார் .இந்த நிலையில் அவரது ஸ்கூட்டரை பறித்துக் கொண்டு அந்த ஆசாமிகள் தப்பி சென்று விட்டனர். காயம் அடைந்த விக்னேஷ் அங்குள்ளர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார் .இது குறித்து பீளமேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த 2 கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்..