பைக்கில் கஞ்சா கடத்தியவர் கைது..!

கோவை சாய்பாபா காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன்,சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் ஆகியோர் நேற்று மேட்டுப்பாளையம் ரோடு எம்ஜிஆர் மார்க்கெட் பின்புறம் சுற்றி வந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்து கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 1200 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன . இது தொடர்பாக திருவாரூர் மாவட்டம், புலிவலம் பகுதியைச் சேர்ந்த வெங்கட சுப்பிரமணியன் ( வயது 30) கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து பைக்கும் கஞ்சா விற்ற பணம் ரூ 66 ஆயிரத்து 75 கைப்பற்றப்பட்டது .மேலும் விசாரணை நடந்து வருகிறது..