கோவை வங்கி ஏ.டி.எம். எந்திரத்தில் இரவில் திருட்டு-மர்ம நபர் கைவரிசை ..!

கோவை ஒப்பணக்கார வீதியில் கரூர் வைசியா வங்கி உள்ளது. இங்குள்ள ஏ.டி.எம் .எந்திரத்தில் இருந்த மோடத்தை இரவில் யாரோ திருடி சென்று விட்டனர். இதுகுறித்து அந்தக் கிளையின் மானேஜர் சியாம் சுந்தர் ,கடைவீதி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார் .சப்- இன்ஸ்பெக்டர் கோமதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.அங்கு பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி .கேமரா மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.