கோவை போலீசார் 8 பேர் அண்ணா விருதுக்கு தேர்வு..!

கோவை:
தமிழக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றி வருபவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு ஆண்டுதோறும் அண்ணா விருது வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டு சிறப்பாக பணியாற்றிய 100 பேருக்கு அண்ணா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கோவை ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் சின்னியம்பாளையத்தை சேர்ந்த மாரிமுத்து தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் பல வழக்குகளில் துரிதமாக செய்யப்பட்டு 200-க்கும் மேற்பட்ட வெகுமதிகளை பெற்றுள்ளார். இதேபோன்று கோவை ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் பிரதாப் சிங், உக்கடம் போலீஸ் நிலைய சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி மற்றும் ஜெயஸ்ரீ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். போலீஸ் ரெக்ரூட் பள்ளி சப்-இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் சப்- இன்ஸ்பெக்டர் பாலு, கிரைம் பிரென்ச் சி.ஐ.டி சப் -இன்ஸ்பெக்டர் ருக்குமணி, கோவை போலீஸ் டெலி கம்யூனிகேஷன் பிரான்ச் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கோவை மாவட்டத்தில் 8 போலீசார் அண்ணா விருதுக்கு தேர்வாகியுள்ளனர். இவர்களுக்கு
அண்ணா பதக்கமும், ரூ.10 ஆயிரம் வெகுமதியும் வழங்கப்படும். கோவை மாவட்டத்தில் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றி அண்ணா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இவர்களுக்கு போலீஸ் அதிகாரிகள், போலீசார், மற்றும் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.