சிட்பண்ட்ஸ்-ஏலச்சீட்டு நடத்தி ரூ 5. கோடி மோசடி- தம்பதி உள்பட 7 பேர் மீது போலீஸ் கமிஷனரிடம் புகார்..!

கோவையில் சீட்பண்ட்ஸ்-ஏலச்சீட்டு நடத்தி ரூ 5 கோடி பணம் மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி பாதிக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்டோர் நேற்று கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவில் புகார் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கோவை ஆவாரம்பாளையத்தை சேர்ந்தவர் சரவணகுமார் வேலு(வயது53).இவரது மனைவி சத்தியா(45), மகன் சதீஷ் உட்பட 7 பேர் கூட்டாக சேர்ந்து ”ஸ்ரீ அம்மன் சிட்பண்ட்ஸ்” என்ற பெயரில் சீட்டு கம்பெனி நடத்தி வந்தனர். இவர்கள் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் சீட்டு பிடித்து ரூ.5 கோடி அளவில் மோசடி செய்தனர். மோசடி பணத்தில் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை வாங்கி குவித்துள்ளனர். எனவே கூட்டு சதி நம்பிக்கை மோசடியில் ஈடுபட்ட அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறி இருந்தனர்.